​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது வெள்ளத்தில் சிக்கிய தாய்-மகள்:தாய் உயிர் தப்பிய நிலையில் மகள் உயிரிழப்பு..! 

Published : Oct 18, 2022 1:42 PM

தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது வெள்ளத்தில் சிக்கிய தாய்-மகள்:தாய் உயிர் தப்பிய நிலையில் மகள் உயிரிழப்பு..! 

Oct 18, 2022 1:42 PM

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே, வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவி, 13 மணி நேர தேடலுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டார்.

சிங்களகோம்பை பகுதியை சேர்ந்த ஜீவிதா, சம்பவத்தன்று மாலை கல்லூரி முடித்து திரும்பிய நிலையில், கொக்குவாரி ஆற்றில் உள்ள தரைப்பாலத்தை தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் கடந்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இருவரும் அடித்து செல்லப்பட்ட நிலையில், மாணவியின் தாய் மரக்கிளையை பற்றி உயிர் தப்பினார்.

வெள்ளத்தில் சிக்கிய மாணவியை, தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தேடிவந்த நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டார்.